Friday, November 21, 2014
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை போடிபட்டியை சேர்ந்தவர் சசீந்திரன் (வயது34). இவர் உடுமலை தனியார் லே–அவுட்டில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் உடுமலை புஷ்பகிவேலன் நகரை சேர்ந்த ஆறுமுகத்தை சந்தித்து பிரபல 2 பெட்ரோலிய நிறுவனங்களின் பெயரை சொல்லி அவற்றுடன் ஒப்பந்த அடிப்படையில் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் ரூ.1000 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் பெட்ரோல் கார்டு வழங்கப்படும் என்றும், அந்த கார்டு மூலம் அந்த பெட்ரோல் பங்குகளில் மாதத்திற்கு ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு பெட்ரோல் பிடித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபரை அறிமுகப்படுத்தினால் ரூ.200 கிடைக்கும் என்றும், ஒரு நபர் 100 கார்டுகளுக்கு மேல் வாங்கினால் போனஸ் அடிப்படையில் அதிக லாபம் அடையலாம் என்று கூறி உறுப்பினராக சேரும்படி சொல்லியதாக கூறப்படுகிறத
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் (பெட்ரோல் பங்க்) பெட்ரோல் நிரப்பும் வகையில் 65 கார்டுகளையும், வேறொரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெட்ரோல் நிரப்பும் வகையில் 4 கார்டுகளையும் மொத்தம் ரூ.69 ஆயிரத்துக்கு 69 கார்டுகள் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கார்டை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது அந்த கார்டுகளுக்கு சசீந்திரன் பணம் கட்டவில்லை என்றும், அதனால் பெட்ரோல் வழங்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் உடுமலை போலீஸ் நிலையில் புகார் செய்தார். புகாரில் அவர் சசீந்திரன் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீந்திரன் உடுமலை 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஆர்.கோகுல்முருகன் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment