Friday, November 21, 2014
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை போடிபட்டியை சேர்ந்தவர் சசீந்திரன் (வயது34). இவர் உடுமலை தனியார் லே–அவுட்டில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் உடுமலை புஷ்பகிவேலன் நகரை சேர்ந்த ஆறுமுகத்தை சந்தித்து பிரபல 2 பெட்ரோலிய நிறுவனங்களின் பெயரை சொல்லி அவற்றுடன் ஒப்பந்த அடிப்படையில் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் ரூ.1000 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் பெட்ரோல் கார்டு வழங்கப்படும் என்றும், அந்த கார்டு மூலம் அந்த பெட்ரோல் பங்குகளில் மாதத்திற்கு ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு பெட்ரோல் பிடித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபரை அறிமுகப்படுத்தினால் ரூ.200 கிடைக்கும் என்றும், ஒரு நபர் 100 கார்டுகளுக்கு மேல் வாங்கினால் போனஸ் அடிப்படையில் அதிக லாபம் அடையலாம் என்று கூறி உறுப்பினராக சேரும்படி சொல்லியதாக கூறப்படுகிறத
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் (பெட்ரோல் பங்க்) பெட்ரோல் நிரப்பும் வகையில் 65 கார்டுகளையும், வேறொரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெட்ரோல் நிரப்பும் வகையில் 4 கார்டுகளையும் மொத்தம் ரூ.69 ஆயிரத்துக்கு 69 கார்டுகள் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கார்டை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது அந்த கார்டுகளுக்கு சசீந்திரன் பணம் கட்டவில்லை என்றும், அதனால் பெட்ரோல் வழங்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் உடுமலை போலீஸ் நிலையில் புகார் செய்தார். புகாரில் அவர் சசீந்திரன் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீந்திரன் உடுமலை 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஆர்.கோகுல்முருகன் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...

0 comments:
Post a Comment