Friday, November 21, 2014
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை போடிபட்டியை சேர்ந்தவர் சசீந்திரன் (வயது34). இவர் உடுமலை தனியார் லே–அவுட்டில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் உடுமலை புஷ்பகிவேலன் நகரை சேர்ந்த ஆறுமுகத்தை சந்தித்து பிரபல 2 பெட்ரோலிய நிறுவனங்களின் பெயரை சொல்லி அவற்றுடன் ஒப்பந்த அடிப்படையில் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் ரூ.1000 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் பெட்ரோல் கார்டு வழங்கப்படும் என்றும், அந்த கார்டு மூலம் அந்த பெட்ரோல் பங்குகளில் மாதத்திற்கு ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு பெட்ரோல் பிடித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபரை அறிமுகப்படுத்தினால் ரூ.200 கிடைக்கும் என்றும், ஒரு நபர் 100 கார்டுகளுக்கு மேல் வாங்கினால் போனஸ் அடிப்படையில் அதிக லாபம் அடையலாம் என்று கூறி உறுப்பினராக சேரும்படி சொல்லியதாக கூறப்படுகிறத
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் (பெட்ரோல் பங்க்) பெட்ரோல் நிரப்பும் வகையில் 65 கார்டுகளையும், வேறொரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெட்ரோல் நிரப்பும் வகையில் 4 கார்டுகளையும் மொத்தம் ரூ.69 ஆயிரத்துக்கு 69 கார்டுகள் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கார்டை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது அந்த கார்டுகளுக்கு சசீந்திரன் பணம் கட்டவில்லை என்றும், அதனால் பெட்ரோல் வழங்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் உடுமலை போலீஸ் நிலையில் புகார் செய்தார். புகாரில் அவர் சசீந்திரன் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீந்திரன் உடுமலை 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஆர்.கோகுல்முருகன் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் முத்துராஜா(22). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தார். வி...

0 comments:
Post a Comment