Friday, November 21, 2014
வாகன காப்பகங்களில் கேட்பாரற்று கிடந்த 876 வாகனங்கள் ஏலம் விடும் பணி நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வாகன காப்பகங்களில் பல நாட்களாக ஏராளமான வாகனங்கள் உரிமையாளர்கள் இன்றி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து வாகன காப்பகங்களில் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை கண்டறிய அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் கணக்கெடுப்பு நடத்தியதில் 17 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 876 வாகனங்கள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இந்த வாகனங்களை போலீசார் கைப்பற்றி ஏலம் விட நடவடிக்கை எடுத்தனர். முறைப்படி அந்த வாகனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, உடுமலை போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட 78 இருசக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும் நேற்று ஏலம் விடப்பட்டது.
இதுபோல் இன்று(புதன்கிழமை) தாராபுரம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்திலும், நாளை(வியாழக்கிழமை) அவினாசி உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் அவினாசி தாலுகா அலுவலகத்திலும், பல்லடம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் திருப்பூர் தாலுகா அலுவலகத்திலும், உடுமலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட வாகனங்கள் மடத்துக்குளம் தாலுகா அலுவலத்திலும் ஏலம் விடப்படுகிறது.
மேலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காங்கயம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் காங்கயம் தாலுகா அலுவலகத்திலும், 25–ந் தேதி பல்லடம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் ஏலம் விடப்பட உள்ளன.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...

0 comments:
Post a Comment