Friday, November 21, 2014
வாகன காப்பகங்களில் கேட்பாரற்று கிடந்த 876 வாகனங்கள் ஏலம் விடும் பணி நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வாகன காப்பகங்களில் பல நாட்களாக ஏராளமான வாகனங்கள் உரிமையாளர்கள் இன்றி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து வாகன காப்பகங்களில் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை கண்டறிய அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் கணக்கெடுப்பு நடத்தியதில் 17 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 876 வாகனங்கள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இந்த வாகனங்களை போலீசார் கைப்பற்றி ஏலம் விட நடவடிக்கை எடுத்தனர். முறைப்படி அந்த வாகனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, உடுமலை போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட 78 இருசக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும் நேற்று ஏலம் விடப்பட்டது.
இதுபோல் இன்று(புதன்கிழமை) தாராபுரம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்திலும், நாளை(வியாழக்கிழமை) அவினாசி உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் அவினாசி தாலுகா அலுவலகத்திலும், பல்லடம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் திருப்பூர் தாலுகா அலுவலகத்திலும், உடுமலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட வாகனங்கள் மடத்துக்குளம் தாலுகா அலுவலத்திலும் ஏலம் விடப்படுகிறது.
மேலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காங்கயம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் காங்கயம் தாலுகா அலுவலகத்திலும், 25–ந் தேதி பல்லடம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் ஏலம் விடப்பட உள்ளன.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment