Wednesday, November 12, 2014


சமீபத்தில் உசிலம்பட்டியில் விமலா என்ற இளம்பெண் வேற்று சமூகத்தைச் சேர்ந்த திலிப் என்பவரை காதலித்ததால் அவரிடமிருந்து பிரித்து செல்லப்பட்டு அவரது பெற்றோர், உறவினர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தை அடுத்து காதலன் திலீப் காவல்துறையில் புகார் தந்ததையடுத்து, காவல்துறையினர் விமலாவின் பெற்றோரை கைது செய்தனர். கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது இந்த சம்பவத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உசிலம்பட்டி காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினர்.தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.உசிலம்பட்டி கவுரவக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி ,தருமபுரி இளவரசனின் மரணமே அரசியல் சக்திகளின் தூண்டுதலால் நடந்தது .இது போன்ற கவுரவ கொலைகள் நடைபெற கூடாது .சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் திருமண விவகார தலையீடு தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ,தமிழகம் முழுவதும் பணியாற்றிடும் ஆதிக்க சாதியை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்ய வேண்டும் .தனக்கும் கௌவர கொலைக்கும் சம்பந்தம் இல்லை என உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை அறிக்கை அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment