Wednesday, November 12, 2014


சமீபத்தில் உசிலம்பட்டியில் விமலா என்ற இளம்பெண் வேற்று சமூகத்தைச் சேர்ந்த திலிப் என்பவரை காதலித்ததால் அவரிடமிருந்து பிரித்து செல்லப்பட்டு அவரது பெற்றோர், உறவினர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தை அடுத்து காதலன் திலீப் காவல்துறையில் புகார் தந்ததையடுத்து, காவல்துறையினர் விமலாவின் பெற்றோரை கைது செய்தனர். கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது இந்த சம்பவத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உசிலம்பட்டி காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினர்.தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.உசிலம்பட்டி கவுரவக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி ,தருமபுரி இளவரசனின் மரணமே அரசியல் சக்திகளின் தூண்டுதலால் நடந்தது .இது போன்ற கவுரவ கொலைகள் நடைபெற கூடாது .சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் திருமண விவகார தலையீடு தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ,தமிழகம் முழுவதும் பணியாற்றிடும் ஆதிக்க சாதியை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்ய வேண்டும் .தனக்கும் கௌவர கொலைக்கும் சம்பந்தம் இல்லை என உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை அறிக்கை அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment