Wednesday, November 12, 2014
துரை நகரில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ரத்தப் 
பரிசோதனையில், 1000 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பிருந்தது 
தெரியவந்துள்ளது. இத்தகவலை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சைப் 
பிரிவு துறைத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வரும் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலக சர்க்கரை நோய் தினமாகும். நம்நாட்டில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அதிலும் தமிழகம் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.
1990 ஆம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுக்கப்பட்டனர். அப்போது 2025 ஆம் ஆண்டில் எவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இருப்பர் என தோராயமாக குறிப்பிட்டனர். ஆனால், நடப்பாண்டிலேயே அந்த எண்ணிக்கையுள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் தொற்றாநோய் சிகிச்சைத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேரை ரத்தப் பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளோம். அதில் 1000 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது புதிதாக கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 15 சதவிகித சர்க்கரை நோயாளிகள் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது அடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வருவது சகஜமாகிவிட்டது.
பழைய சாதம், இட்லி, தோசை என உணவுகளை மோர், நீராகாரம், சட்டினி, சாம்பார் என அனைத்திலும் ஊறவைத்து சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு அடித்தளமாவது தெரியவந்துள்ளது.
அரைகுறையாக வெந்த சாதத்தை கீரை உள்ளிட்டவற்றுடன் சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
நடைப் பயிற்சி முக்கியம். ஆனால், வீடு வாசல் வரை வாகனத்தில் வந்திறங்கும் வசதி கூடியுள்ளதால் பெண்கள் கூட சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் வியர்வை சிந்த நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.
பரிசோதனைக்கு வாய்ப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி காலை இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில் பரிசோதனையுடன், நோய் பாதிப்புடையோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவில் கூறப்பட்டது
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வரும் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலக சர்க்கரை நோய் தினமாகும். நம்நாட்டில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அதிலும் தமிழகம் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.
1990 ஆம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுக்கப்பட்டனர். அப்போது 2025 ஆம் ஆண்டில் எவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இருப்பர் என தோராயமாக குறிப்பிட்டனர். ஆனால், நடப்பாண்டிலேயே அந்த எண்ணிக்கையுள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் தொற்றாநோய் சிகிச்சைத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேரை ரத்தப் பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளோம். அதில் 1000 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது புதிதாக கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 15 சதவிகித சர்க்கரை நோயாளிகள் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது அடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வருவது சகஜமாகிவிட்டது.
பழைய சாதம், இட்லி, தோசை என உணவுகளை மோர், நீராகாரம், சட்டினி, சாம்பார் என அனைத்திலும் ஊறவைத்து சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு அடித்தளமாவது தெரியவந்துள்ளது.
அரைகுறையாக வெந்த சாதத்தை கீரை உள்ளிட்டவற்றுடன் சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
நடைப் பயிற்சி முக்கியம். ஆனால், வீடு வாசல் வரை வாகனத்தில் வந்திறங்கும் வசதி கூடியுள்ளதால் பெண்கள் கூட சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் வியர்வை சிந்த நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.
பரிசோதனைக்கு வாய்ப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி காலை இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில் பரிசோதனையுடன், நோய் பாதிப்புடையோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவில் கூறப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment