Saturday, November 01, 2014
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலூர் பகுதியில் பெய்த கனமழையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை, ஆட்சியர் எல். சுப்பிரமணியன் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான வண்டிமாடு மின்னல் பாய்ந்து இறந்தது. இதற்கு, ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ராசுவிடம் வழங்கினார். மேலும், சாத்தமங்கலத்தில் ஆறுமுகம், இடையவலசில் ஆரம்மாள் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு தலா ரூ. 2,500-க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆட்சியர் சகாயம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் விசாரணை தொடங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மேலூர் வட்டாட்சியர் எஸ். மணிமாறன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment