Saturday, November 01, 2014
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலூர் பகுதியில் பெய்த கனமழையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை, ஆட்சியர் எல். சுப்பிரமணியன் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான வண்டிமாடு மின்னல் பாய்ந்து இறந்தது. இதற்கு, ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ராசுவிடம் வழங்கினார். மேலும், சாத்தமங்கலத்தில் ஆறுமுகம், இடையவலசில் ஆரம்மாள் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு தலா ரூ. 2,500-க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆட்சியர் சகாயம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் விசாரணை தொடங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மேலூர் வட்டாட்சியர் எஸ். மணிமாறன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment