Saturday, November 01, 2014
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலூர் பகுதியில் பெய்த கனமழையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை, ஆட்சியர் எல். சுப்பிரமணியன் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான வண்டிமாடு மின்னல் பாய்ந்து இறந்தது. இதற்கு, ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ராசுவிடம் வழங்கினார். மேலும், சாத்தமங்கலத்தில் ஆறுமுகம், இடையவலசில் ஆரம்மாள் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு தலா ரூ. 2,500-க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆட்சியர் சகாயம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் விசாரணை தொடங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மேலூர் வட்டாட்சியர் எஸ். மணிமாறன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment