Tuesday, November 18, 2014
கரூர் பஸ் நிலையத்தில் ஓடும் இலவச கழிப்பிட கழிவுநீர் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை குறித்து வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதனடிப்படையில், இஸ்லாமிய உலமாக்கல் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகம் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் பதிவு போன்றவை பணிகளும் தாமதமாகி வருகின்றன. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களின் மனுவில் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளி நாகராஜ் அளித்த மனுவில், தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலவிடுதி காவல் நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோல், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் தெருவில் உள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரும், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் இலவச, கழிப்பிட கழிவு நீர் பஸ் நிலையம் மத்தியில் பரவி வருவதை தடுக்க வேண்டும், பஸ் நிலைய பயணிகள் நடைபாதை ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாலை நேரங்களில் பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட குடிநீர், இணைப்புகளுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் அருணாசலம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் மனுக்கள் வழங்கப்பட்டன. |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment