Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கரூர் அ.தி.மு.க., தொண்டர் குடும்பத்துக்குநிதியுதவி         வேலாயுதம்பாளையம் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அதிர்ச்சியில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டரின் குடும்பத்துக்கு, நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட தளவாபாளையம், ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் ஜீவா (எ) பாக்கியராஜ், 40. அ.தி.மு.க. தொண்டர். இவருக்கு ரேகா என்ற மனைவியும், சிவதி, 17, ஹரி கிருஷ்ணா, 13, மகன்களும் உள்ளனர்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதித்ததால், அதிர்ச்சியில் பாக்கியராஜ் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு, நிவாரண நிதியாக, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கரூர் தொகுதி செயலாளர் திருவி.கா., காகித ஆலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் மார்க்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..  

0 comments: