Wednesday, November 05, 2014
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே 2 பிரிவினர் மோதல் விவகாரத்தால் போலீசார் தொடர்ந்து முகாம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- நாகவள்ளி. தம்பதியின் மகள் வினிதா (17), கடந்த ஜூன் 23ம் தேதி இப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போதும் இதுவரை குற்றவாளிகள் யார் என்று கண்டறியப்படவில்லை.இதனிடையே, கடந்த 2ம் தேதி இரவு சிலர் போதையில் ஒரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக வந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இருந்த போதும், நேற்று காலை சிலர் அங்கிருந்த வீடுகளின் முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர். மற்றும் சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த சின்னாதாராபுரம் ஏட்டு ஆனந்தன், கிராமத்தை சேர்ந்த கனகா (18), சித்ரா (17), பூர்ணிமா (16), சுரேஷ் (18) ஆகியோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மாயனூர் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 40 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிச்சம்பட்டி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வழியாக வருவோர் தீவிர விசாரணைக்கு பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பிச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.மேலும், அக்கிராமத்தில் கரூர் எஸ்பி ஜோஷிநிர்மல்குமார், திருச்சி எஸ்பி ராஜேஸ்வரி, குளித்தலை ஆர்டிஓ சித்திரைராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வேணி ஆகியோர் தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment