Thursday, November 13, 2014
On Thursday, November 13, 2014 by Unknown in Break

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் ஏரி–குளங்கள் நிரம்பின. மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பக்கூடிய வீராணம் ஏரியும் நிரம்பியது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 45.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இடையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளதால் கடலூர் டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்க வீராணம் ஏரியில் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 44.40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி வைத்து கொண்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும் வி.எம்.எஸ். மதகு மூலம் 555 கன அடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 629 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment