Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    
செங்கல்பட்டு–விழுப்புரம் வழித்தடத்தில் பேரணி–திண்டிவனம் இடையே பாராமரிப்பு பணி இன்று நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
எழும்பூரில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படக்கூடிய மதுரை வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். மதியம் 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி–திருப்பதி எக்ஸ்பிரஸ் மதியம் 2.35 மணிக்கு புறப்படும்.
மேல்மருவத்தூர்–விழுப்புரம் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 9.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.35 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. 

0 comments: