Friday, November 14, 2014
கோவையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தென்காசியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் ஓட்டினார். நெல்லையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மதுரை நோக்கி சென்றது.
லாரியை அய்யாதுரை என்பவர் ஓட்டி சென்றார். பஸ் இன்று காலை நெல்லை தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் வந்தது. இந்த வேளையில் எதிரே முன்னால் சென்ற ஒரு காரை லாரி முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், பஸ்சும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் அரசு பஸ் அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சின் முன்பகுதியும், லாரியின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் பஸ்சில் வந்த நாரைகிணறு ரவி (38), வள்ளியூர் பாலபிரியா (21), ஆலங்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மல்லிகா(40), 4 வயது குழந்தை தவமணி, சீதாலட்சுமி(32), லாரி டிரைவர் அய்யாதுரை ஆகியோர் உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தச்சநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து பற்றி விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் போது அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment