Friday, November 14, 2014

கோவையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தென்காசியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் ஓட்டினார். நெல்லையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மதுரை நோக்கி சென்றது.
லாரியை அய்யாதுரை என்பவர் ஓட்டி சென்றார். பஸ் இன்று காலை நெல்லை தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் வந்தது. இந்த வேளையில் எதிரே முன்னால் சென்ற ஒரு காரை லாரி முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், பஸ்சும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் அரசு பஸ் அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சின் முன்பகுதியும், லாரியின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் பஸ்சில் வந்த நாரைகிணறு ரவி (38), வள்ளியூர் பாலபிரியா (21), ஆலங்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மல்லிகா(40), 4 வயது குழந்தை தவமணி, சீதாலட்சுமி(32), லாரி டிரைவர் அய்யாதுரை ஆகியோர் உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தச்சநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து பற்றி விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் போது அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment