Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    
நெல்லையில் அரசு பஸ்–லாரி மோதல்: 12 பயணிகள் காயம்
கோவையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தென்காசியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் ஓட்டினார். நெல்லையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மதுரை நோக்கி சென்றது.
லாரியை அய்யாதுரை என்பவர் ஓட்டி சென்றார். பஸ் இன்று காலை நெல்லை தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் வந்தது. இந்த வேளையில் எதிரே முன்னால் சென்ற ஒரு காரை லாரி முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், பஸ்சும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் அரசு பஸ் அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சின் முன்பகுதியும், லாரியின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் பஸ்சில் வந்த நாரைகிணறு ரவி (38), வள்ளியூர் பாலபிரியா (21), ஆலங்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மல்லிகா(40), 4 வயது குழந்தை தவமணி, சீதாலட்சுமி(32), லாரி டிரைவர் அய்யாதுரை ஆகியோர் உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தச்சநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து பற்றி விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் போது அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

0 comments: