Saturday, November 01, 2014
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணனை தேடி தரும்படி தங்கை போலீசி ல் புகார்
க.பரமத்தி நஞ்சைகாளக்குறிச்சி அருகே அமராவதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணணை தேடி தரும்படி தங்கை சின்னதாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், முசி றி வட்டம், ராமசமுத்திரம் அய்யலூரை சேர்ந்தவர் பழனிவேல் (55). இவரது தங்கை லட்சுமி. இவர் கரூர் மாவட்டம், நஞ்சைகாளக்குறிச்சி அருகேயுள்ள செல்லாண்டியம்மன்கோயில் பகுதியில் வசித்து வருகிறார். பழனிவேல் மகன் கணேச னும் (18), மகள் நந்தினி (15) ஆகியோர் அத்தை லட்சுமி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக பழனிவேல் அங்கிருந்து புறப்பட்டு நஞ்சைகாளக்குறிச்சி அமராவதி ஆற்றின் எதிர்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் பகுதிக்கு செல்ல ஆற்றில் இறங்கியுள் ளார். அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென் றதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீசார் அவரை தடுத்துள்ளனர். எதிர்கரையில் இருந்த கணேசனும், தந்தையை ஆற் றில் இறங்கி வரவேண்டாம் என தடுத்துள்ளார். இவற்றையெல்லாம் மீறி ஆற்று வெள்ளத்தில் பழனிவேல் இறங்கியதாக தெரிகிறது. அப்போது அவரை வெள் ளம் அடித்துச் சென்றுள் ளது. இதுகுறித்து அவரது தங்கை லட்சுமி சின்னதாராபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நீரில் அடி த்துச் சென்ற பழனிவேலை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment