Saturday, November 01, 2014
சுக்காளியூர் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சிமெண்ட் தடுப்புகள் அப்புறப்படுத்தப்படுமா?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கரூர் சுக்காளியூர் பிரதான சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சிமெ ண்ட் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டு மென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் திருமாநிலையூரில் இருந்து சுக்காளியூர் வரை உள்ள பைபாஸ் சாலையில் நடுவே சிமென்ட் சாலைத் தடுப்புகள் சாலையை பிரிக் கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்க ளாக பெய்த மழையால் புதிய சுக்காளியூரில் மழை நீர் பெருக்கெடுத்தது. மழை நீர் சாலையில் தேங்கிய தால் அப்பகுதி மக்கள் சா லைத்தடுப்பை திருப்பி விட் டும் சில இடங்களில் அகற் றியும் நீர்வடிய செய்தனர்., தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சாலைத்தடுப்புகள் நடுரோட்டில் குறுக் கும் நெடுக்குமாக கிடக்கின்றன. பகல் வேளையில் வாகன ஓட்டிகள் ஒருசிலர் சுதாரித்துக்கொண்டு வாகனங்களை ஓரமாக ஓட்டிச் செல்கின்றனர். இருந்தபோ திலும் டூவீலர் மற்றும் நான் கு சக்கர வாகனங்களில் வருபவர்களில் சிலர் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சிறு விபத்துகளில் சிக்கிவிடுகின்றனர். ஆனால், இரவில் இந்த இடத்தில் தெருவிளக்குகள் கிடையாது என்பதாலும், வளைவுகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், விழுந்து கிடக்கும் சாலைத் தடுப்புகள் தெரியாமலும் வாகனங்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் 2 நாட்களாகியும் சம்மந்தப்பட்ட துறையினர் சாலை சிமென்ட் தடுப்புகளை அப்புறப்படுத்தி சரி செய்யாமல் உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தாறுமாறாக கிடக்கும் இந்த சாலை சிª மன்ட் தடுப்புகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக் குக்கு வழி செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment