Wednesday, November 05, 2014
அனுமதியில்லாத உரம் விற்பனைக்கு தடை - கரூர் மாவட்டகலெக்டர் உத்தரவு
கரூர் மாவட்டத்தில், அனுமதியின்றி உரம் விற்பனை செய்ததாக, 27 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 46 மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது' என, கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை தீவிரமாக துவங்கியதால், சம்பவ பருவ நெல் சாகுபடிக்கான நடவுப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தேவைப்படும் ரசாயன உரம் போதுமான அளவில், துவக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில், யூரியா உரம் உற்பத்தி இல்லாதததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால், கரூர் மாவட்டத்துக்கு தேவையான உரம், பிற நிறுவனங்கள் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட, சாகுபடி பயிர்களுக்கு தேவையான, யூரியா உரம், நவம்பர் மாதத்தில், 1,800 மெட்ரிக் டன்னாகும். இருப்பினும், பற்றாகுறை ஏற்படாமல் கூடுதலாக, 600 மெட்ரிக் டன் சேர்த்து, 2,400 மெட்ரிக் டன்னுக்கு, தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வினியோகிக்க வேளாண்மை இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், உர வினியோகத்தை கண்காணிக்கும், சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 74 தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்து, ஒன்பது உரமாதிரி எடுக்கப்பட்டது..
தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 46 மெட்ரிக் டன் உரம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 27 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அனைத்து விவசாயிகளுக்கும், தேவைப்படும் உரங்களை தட்டுபாடு இல்லாமல் வழங்க, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசீது பெற்றால் மட்டும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள், யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை தீவிரமாக துவங்கியதால், சம்பவ பருவ நெல் சாகுபடிக்கான நடவுப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தேவைப்படும் ரசாயன உரம் போதுமான அளவில், துவக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில், யூரியா உரம் உற்பத்தி இல்லாதததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால், கரூர் மாவட்டத்துக்கு தேவையான உரம், பிற நிறுவனங்கள் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட, சாகுபடி பயிர்களுக்கு தேவையான, யூரியா உரம், நவம்பர் மாதத்தில், 1,800 மெட்ரிக் டன்னாகும். இருப்பினும், பற்றாகுறை ஏற்படாமல் கூடுதலாக, 600 மெட்ரிக் டன் சேர்த்து, 2,400 மெட்ரிக் டன்னுக்கு, தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வினியோகிக்க வேளாண்மை இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், உர வினியோகத்தை கண்காணிக்கும், சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 74 தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்து, ஒன்பது உரமாதிரி எடுக்கப்பட்டது..
தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 46 மெட்ரிக் டன் உரம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 27 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அனைத்து விவசாயிகளுக்கும், தேவைப்படும் உரங்களை தட்டுபாடு இல்லாமல் வழங்க, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசீது பெற்றால் மட்டும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள், யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment