Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ளஅங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு கலெக்டர் ஜெயந்தி அழைப்பு                       கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என, கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், 97 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ஒரு குறு அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும், 124 அங்கன்வாடி உதவியாளர்களுக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.விண்ணப்பப்படிவம், காலிப் பணியிட விவரம் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்களை, அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன், சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டை இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர், 10ம் தேதி மாலை, 5.45 மணிக்குள், அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments: