Monday, November 24, 2014
திருப்பூர் 20வது வார்டு நஞ்சப்பா நகரில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை மாநகராட்சி நிர்வாகம் குப்பை வண்டிகளை நிறுத்துவதற்காக பயன்படுத்தி வருகிறது. இந்த சமுதாயக்கூடத்தை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஏழை, எளிய பொது மக்கள், பனியன் தொழிலாளர் உள்ளிட்ட உழைப்பாளிகள் குடும்பங்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தனியார் மண்டபங்களை வாடகைக்குப் பிடிப்பதென்றால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து பல ஆயிரம் வரை செலவாகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகை வசூலிக்கும் வகையில் சமுதாயக்கூடம் நஞ்சப்பா நகரில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது குப்பை வண்டிகளை நிறுத்துவதுடன், அந்த இடமே பெரிய குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
எனவே இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப புதுப்பித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் வாலிபர் சங்க சக்திநகர் கிளை தலைவர் எம்.தங்கராம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் தங்கராஜ், நிர்வாகி என்.பிரகாஷ், வடக்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், கருணாகரன் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் எம்.எம்.நடராஜ் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். முதல் நாளில் நானூறு பேரிடம் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்த வாரம் முழுவதும் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு டிசம்பர் 2ம் தேதி திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் மனுக் கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment