Monday, November 24, 2014
திருப்பூர் 20வது வார்டு நஞ்சப்பா நகரில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை மாநகராட்சி நிர்வாகம் குப்பை வண்டிகளை நிறுத்துவதற்காக பயன்படுத்தி வருகிறது. இந்த சமுதாயக்கூடத்தை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஏழை, எளிய பொது மக்கள், பனியன் தொழிலாளர் உள்ளிட்ட உழைப்பாளிகள் குடும்பங்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தனியார் மண்டபங்களை வாடகைக்குப் பிடிப்பதென்றால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து பல ஆயிரம் வரை செலவாகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகை வசூலிக்கும் வகையில் சமுதாயக்கூடம் நஞ்சப்பா நகரில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது குப்பை வண்டிகளை நிறுத்துவதுடன், அந்த இடமே பெரிய குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
எனவே இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப புதுப்பித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் வாலிபர் சங்க சக்திநகர் கிளை தலைவர் எம்.தங்கராம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் தங்கராஜ், நிர்வாகி என்.பிரகாஷ், வடக்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், கருணாகரன் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் எம்.எம்.நடராஜ் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். முதல் நாளில் நானூறு பேரிடம் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்த வாரம் முழுவதும் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு டிசம்பர் 2ம் தேதி திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் மனுக் கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment