Monday, December 29, 2014
விசைத்தறித் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரும்படி திருப்பூர் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) 8வது தலைமை மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம் சமுதாயக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற தலைமை மகாசபைக்கு இந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல் இந்த மகாசபையை தொடக்கி வைத்து உரையாற்றினார். ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தாரும் தொழிலாளர்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர். தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நுட்பமாகச் செயல்பட வேண்டும் என்று கே.தங்கவேல் கூறினார்.
சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி அறிக்கை சமர்ப்பித்தர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.மூர்த்தி மகாசபையை வாழ்த்திப் பேசினார்.
தீர்மானங்கள்
இம்மகாசபையில், விசைத்தறித் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைப்படி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும், நலவாரிய செயல்பாட்டைச் சீரமைத்து உறுப்பினர்களுக்கான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், விசைத்தறித் தொழிலாளர்கள் உரிய வீட்டு வசதி இல்லாமல் பொருளாதார நெருக்கடியுடன் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பசுமை வீடு கட்டித்தரும் திட்டத்தை விசைத்தறித் தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
இந்த மகாசபையில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக அ.பழனிசாமி, மாவட்டப் பொதுச் செயலாளராக பி.முத்துசாமி, மாவட்டப் பொருளாளராக ஏ.ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர்களாக புதுப்பாளையம் கே.முருகன், அய்யம்பாளையம் ஈஸ்வரன், ராசாகவுண்டம்பாளையம் பழனிசாமி, மாவட்டச் செயலாளர்களாக சுல்தான்பேட்டை கே.வேலுச்சாமி, திருப்பூர் பாலகிருஷ்ணன், வெள்ளகோவில் நல்லதம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 16 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முடிவில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவரும், விசைத்தறி தொழிலாளர் அரங்க மாநில கன்வீனருமான எம்.சந்திரன் மகாசபையை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார். இதில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment