Monday, December 22, 2014
உடுமலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.18 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணியில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மேலும் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மேம்பால கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன்றன.
தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள இப்பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகர்மன்ற உறுப்பினர் டி.கண்ணன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
அரியவகை சிறுநீரக புற்றுநோய் கட்டியை கண்டறிந்து சிக்கலான அறுவை சிகிச்சையை திறம்பட கையாண்ட அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பல்வேறு உடல் உபா...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment