Saturday, December 06, 2014

அவருக்குப்பின் கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த 3-ந்தேதி மதுரை வந்து விசாரணை தொடங்கினார். அவர் விசாரணை நடத்துவதற்காக, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தங்குவதற்கு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நேற்று 3-வது நாளாக அவர் பூமாலை வணிக வளாகத்தில் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், அவரது விசாரணைக்குழு அலுவலர்களில் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அதில், “உங்கள் குழு கண்காணிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆபத்து உள்ளது. விசாரணை அதிகாரியின் தங்கும் அறை, அலுவலகம் ஆகியவற்றில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, சகாயம் தங்கும் சுற்றுலா மாளிகை அறை, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒட்டுக்கேட்பு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனினும், சுற்றுலா மாளிகையில் அவர் தங்கியிருந்த அறைக்கு பதில் வேறு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment