Saturday, December 06, 2014

On Saturday, December 06, 2014 by Unknown in ,    
சகாயம் அறையில் ஒட்டு கேட்கும் கருவியா?: எஸ்.எம்.எஸ். தகவலால் பரபரப்புமதுரை மாவட்டம், மேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் குவாரி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரத்து 388 கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2011-ம் ஆண்டு கலெக்டராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

அவருக்குப்பின் கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த 3-ந்தேதி மதுரை வந்து விசாரணை தொடங்கினார். அவர் விசாரணை நடத்துவதற்காக, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தங்குவதற்கு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நேற்று 3-வது நாளாக அவர் பூமாலை வணிக வளாகத்தில் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், அவரது விசாரணைக்குழு அலுவலர்களில் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அதில், “உங்கள் குழு கண்காணிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆபத்து உள்ளது. விசாரணை அதிகாரியின் தங்கும் அறை, அலுவலகம் ஆகியவற்றில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, சகாயம் தங்கும் சுற்றுலா மாளிகை அறை, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒட்டுக்கேட்பு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனினும், சுற்றுலா மாளிகையில் அவர் தங்கியிருந்த அறைக்கு பதில் வேறு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டன

0 comments: