Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    





தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெப்போலியன் ரசிகர் மன்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நெப்போலியன் கலந்துகொண்டு பேசும்போது, “தமிழக பாஜகவில் வரும் மார்ச் மாதத் துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர் களை மன்றத்தின் சார்பாக சேர்க்க வேண்டும். பாஜக பொதுக் கூட்டங் களில் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளோடு இணைந்து மன்றத்தினர் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெருமையை பரப்பும் நோக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மாவட்ட தலைவர்களை கொண்ட இணைய தள குழு ஒன்றையும் நெப்போலியன் அமைத்தார்.
இக்கூட்டத்தின்போது நெப்போலியன் பாஜகவில் இணை யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் கவுரி சங்கர் நன்றி கூறினார்.

0 comments: