Monday, January 05, 2015
ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் விஜய் ரூ.2 லட்சம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
பாலா என்ற குழந்தைக்கு எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் பகிரப்பட்டன.
Help Baby Bala - Bone Marrow Transplatation Operation என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டு, அக்குழந்தையின் புகைப்படத்துடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை அறிந்த விஜய், உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
இது குறித்து பாலாவின் தந்தை முருகனிடம் பேசியபோது, "எனது குழந்தைக்கு மொத்தமாக சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு செலவு செய்வதற்கு என்னிடம் பண வசதி இல்லை. முதல் ஆளாக நடிகர் விஜய் 2 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் 1 லட்ச ரூபாய் அளித்தார்.
சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் தொகை அனுப்பி இருக்கிறார்கள். இதுவரை 4 லட்ச ரூபாய் வந்திருக்கிறது. இன்னும் 16 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. என் குழந்தைக்கு பணம் என்பதையும் தாண்டி அனைவரது பிரார்த்தனை மிகவும் முக்கியம்.
என் குழந்தைப் பற்றிய முழுமையான விவரங்கள் அனைத்துமே (https://www.facebook.com/helpbabybala) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment