Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    




ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் விஜய் ரூ.2 லட்சம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
பாலா என்ற குழந்தைக்கு எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் பகிரப்பட்டன.
Help Baby Bala - Bone Marrow Transplatation Operation என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டு, அக்குழந்தையின் புகைப்படத்துடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை அறிந்த விஜய், உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
இது குறித்து பாலாவின் தந்தை முருகனிடம் பேசியபோது, "எனது குழந்தைக்கு மொத்தமாக சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு செலவு செய்வதற்கு என்னிடம் பண வசதி இல்லை. முதல் ஆளாக நடிகர் விஜய் 2 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் 1 லட்ச ரூபாய் அளித்தார்.
சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் தொகை அனுப்பி இருக்கிறார்கள். இதுவரை 4 லட்ச ரூபாய் வந்திருக்கிறது. இன்னும் 16 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. என் குழந்தைக்கு பணம் என்பதையும் தாண்டி அனைவரது பிரார்த்தனை மிகவும் முக்கியம்.
என் குழந்தைப் பற்றிய முழுமையான விவரங்கள் அனைத்துமே (https://www.facebook.com/helpbabybala) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

0 comments: