Friday, January 23, 2015
ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது திடீர் ஆய்வுகள்
நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு
கூட்டுறவு ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு சில ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதும், பொருட்களை போலி ரசீது மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளில் விற்பனைத் தொகையை கருவூலத்திற்கு செலுத்தாமலும், இருப்புத் தொகையில் குறைவு ஏற்படுத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் தேங்கல்பட்டி, மதிப்பனூர், மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம்–1, பொன்னிநகர்–1 ஆகிய 5 கடைகளின் விற்பனையாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 கடைகளின் விற்பனையாளர்களையும் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 652 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறும்போது இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது ஒரு சில ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதும், பொருட்களை போலி ரசீது மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளில் விற்பனைத் தொகையை கருவூலத்திற்கு செலுத்தாமலும், இருப்புத் தொகையில் குறைவு ஏற்படுத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் தேங்கல்பட்டி, மதிப்பனூர், மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம்–1, பொன்னிநகர்–1 ஆகிய 5 கடைகளின் விற்பனையாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 கடைகளின் விற்பனையாளர்களையும் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 652 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறும்போது இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment