Friday, January 23, 2015
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த
2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை
அ.தி.மு.க. வில் இருந்து கட்சி தலைமை நீக்கி உத்தரவிட்டது.
கிழக்கு மண்டல தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் கிழக்கு மண்டல தலைவர் பதவி காலியானதால் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் கிழக்கு மண்டல நிர்வாகம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிழக்கு மண்டல தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக 70–வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இன்று காலை மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடந்தது. காலை 9 மணியளவில் அ.தி.மு.க.வை சேர்ந்த சண்முகவள்ளி மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான கதிரவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் காலை 10.30 மணிக்கு சண்முகவள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கமிஷனர் கதிரவன், சண்முகவள்ளியிடம் வழங்கினார்.
கிழக்கு மண்டல புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகவள்ளிக்கு மேயர் ராஜன் செல்லப்பா, துணை மேயர் திரவியம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், நிலைக்குழு தலைவர்கள் முத்துகருப்பன், ஜெயபால், சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கர், கவுன்சிலர்கள் குமார், காசிராமன், முருகேசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிச்சாமி, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்பட பலர் சண்முகவள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய கிழக்கு மண்டல தலைவர் சண்முகவள்ளி கூறுகையில், மக்களின் முதல்வர் அம்மா கொடுத்த இந்த பதவி மூலம் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுவேன். கிழக்கு மண்டலத்துக்குபட்ட அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளையும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளையும் விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment