Friday, January 23, 2015
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த
2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை
அ.தி.மு.க. வில் இருந்து கட்சி தலைமை நீக்கி உத்தரவிட்டது.
கிழக்கு மண்டல தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் கிழக்கு மண்டல தலைவர் பதவி காலியானதால் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் கிழக்கு மண்டல நிர்வாகம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிழக்கு மண்டல தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக 70–வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இன்று காலை மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடந்தது. காலை 9 மணியளவில் அ.தி.மு.க.வை சேர்ந்த சண்முகவள்ளி மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான கதிரவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் காலை 10.30 மணிக்கு சண்முகவள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கமிஷனர் கதிரவன், சண்முகவள்ளியிடம் வழங்கினார்.
கிழக்கு மண்டல புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகவள்ளிக்கு மேயர் ராஜன் செல்லப்பா, துணை மேயர் திரவியம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், நிலைக்குழு தலைவர்கள் முத்துகருப்பன், ஜெயபால், சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கர், கவுன்சிலர்கள் குமார், காசிராமன், முருகேசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிச்சாமி, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்பட பலர் சண்முகவள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய கிழக்கு மண்டல தலைவர் சண்முகவள்ளி கூறுகையில், மக்களின் முதல்வர் அம்மா கொடுத்த இந்த பதவி மூலம் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுவேன். கிழக்கு மண்டலத்துக்குபட்ட அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளையும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளையும் விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment