Monday, January 19, 2015
முத்தூரில் செல்லிடைபேசிக் கடையின் சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்து ரூ.65,000 ரொக்கத்தை திருடிச்சென்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் சுவற்றைத் துளையிட்டு திருடிய சம்பவம், காங்கயம் வட்டாரத்தில் இது தான் முதல் முறையென போலீஸார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அருகே ஊஞ்சக்காட்டுவலசைச் சேர்ந்தவர் கே.சசிக்குமார் (31). இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் கல்லன் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர், முத்தூர் பேருந்து நிலையம் அருகில் எம்.வி.பி. வணிக வளாகத்தில் செல்லிடைபேசிக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை இரவு அவர் கடையைப் பூட்டிச்சென்றார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சசிக்குமார் கடையைத் திறந்தபோது, பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், கடையின் பின்புறச் சுவற்றில் பெரியளவில் ஓட்டை போடப்பட்டிருந்ததைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தார். மேஜையில் இருந்த ரூ.65,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. செல்லிடைபேசிகள் திருடுபோகவில்லை.
கடையையொட்டியுள்ள, செல்லிடைபேசி பழுது சரிசெய்யும் அறையின் மேற்கூரை வழியாக மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து, கடப்பாறையால் சுவற்றில் துளைபோட்டு தப்பிச்சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment