Monday, January 19, 2015
வேகமாகப் பரவிவரும் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரி, குப்பை, புதர்களை உடனடியாக அகற்றுமாறு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் மத்தியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டது.
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரவும், குப்பையையும், புதர்களையும் உடனடியாக அப்புறபடுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில், மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன், ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) லதா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் என்.ரகுபதி, மாநகர் நல அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...

0 comments:
Post a Comment