Monday, January 19, 2015
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஒசூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனி செல்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஈரோட்டிலிருந்து அரச்சலூர், காங்கயம், தாராபுரம் வழியாக பழனி செல்வர். பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் நாள்களில் ஈரோடு-பழனி மார்க்கத்தில் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கிடையே தான் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதேபோல, அதிகளவிலான வாகனப் போக்குவரத்தினால் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டு காங்கயம் அருகே ஊதியூரை அடுத்துள்ள நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக தாராபுரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக பாதயாத்திரை பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பு இந்த சாலையின் பல்வேறு இடங்கள் மண் சாலையாக இருந்ததால், பக்தர்கள் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியாமல் இருந்தது.
தற்போது, தார்ச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் இந்த புதிய சாலையில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாதயாத்திரை பக்தர்கள் கூறுகையில், புதிதாகப் போடப்பட்டுள்ள இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் இல்லை என்பதால், பாதயாத்திரை பக்தர்கள் கவலையின்றி நடந்து செல்ல முடிகிறது. மேலும், பயண தூரமும் குறைந்துள்ளது. அடுத்தாண்டு, இன்னும் பெரும்பாலான பக்தர்கள் இந்த சாலை வழியாக பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.
இப்புதிய சாலை வழியாக பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதால், நொச்சிப்பாளையம்-தாராபுரம் பிரதான சாலையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து, வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர். விபத்து அச்சமின்றி பக்தர்களும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment