Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News
ரஜினி, விஜய், அஜீத், சிம்பு என முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்த சந்தானம், கதாநாயகனாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ அவருக்கு தனி ஹீரோ அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
இப்படத்திற்கு பிறகு அவர் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தது. இருந்தாலும், அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் ஏற்கெனவே 4 படங்கள் வெற்றியடைந்ததால் இந்த படத்திலும் அந்த கூட்டணி இணைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருப்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடிக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து முழுநேர கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சந்தானம். இவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment