Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News

‘ஐ’ படத்தில் 'திருநங்கைகளை' அவதூறாக சித்தரித்துள்ளதாக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக திருநங்கைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஓஜாஸ் ரஜானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருநங்கை நண்பர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். ‘ஐ’ படத்தின் கதை ஒரு காதல் கதை. அந்த காதலை ஒரு திருநங்கை வெளிப்படுத்துவதான கதாபாத்திரம் என்னுடையது. மற்றபடி, யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காகவோ எடுக்கப்படவில்லை. என்னுடைய கதாபாத்திரத்தை ஷங்கர் ரொம்பவும் அழகாக படமாக்கியிருந்தார்.
நான் தற்போது இந்தியாவில் இல்லை. படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆகையால், இந்த அறிக்கையை என்னுடைய வேண்டுகோளாக ஏற்று, ‘ஐ’ படத்தின் மீது எந்த கோபமும் வேண்டாம், வெற்றியை மட்டும் கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment