Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News

விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலன்று ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது.
பொங்கல் விடுமுறை தினங்களில் ‘ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரமின் முந்தைய படங்கள் இதுபோன்று வசூல் சாதனை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ரிலீசான முதல் ஓரிரு தினங்களிலேயே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ‘மனோகருடு’ என்ற பெயரில் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியில் இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் ‘ஐ’ படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை அவமதிப்பது போல், காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கண்டித்து இப்போராட்டத்தை நடத்துகின்றனர். சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி தணிக்கை குழுவிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், தணிக்கை குழு அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. திருநங்கைகள் போராட்டத்தை தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment