Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News
சினிமா நடிகர், நடிகைகள் பலரும் சமூக இணையதளங்களில் தங்கள் பெயரில் பக்கம் ஒன்றை நிறுவி, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக தோன்றினாலும், மறுபுறம் ஆபத்தான விஷயங்களும் இதில் இருக்கிறது. சிலர் ஏதாவது ஒரு பிரபலத்தின் பெயருடன் போலியான கணக்குகளை தொடங்கி, அதன்மூலம் அவர்கள் பெயரை களங்கப்படுத்தும் விதமாக ஏதாவது செய்து கொண்டிருப்பர். இதற்காகவே பல நட்சத்திரங்களும் சமூக இணையதளங்களுக்குள் வர பயப்படுவார்கள்.
தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பெயரில் பேஸ்புக்கில் பக்கம் ஒன்று திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இது சூர்யாவின் பக்கம்தான் என்று எண்ணி பல்வேறு ரசிகர்களும் அந்த பக்கத்தை லைக் செய்தனர்.
ஆனால், இந்த பக்கம் போலியானது என்று அங்கீகரிக்கப்பட்ட சூர்யா ரசிகர் மன்றம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூர்யா, இதுவரை சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இணையவில்லை என்றும், தற்போது பேஸ்புக்கில் சூர்யா பெயரில் பக்கம் வெளியானது போலியானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பக்கத்தை தொடங்கியவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment