Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News
சினிமா நடிகர், நடிகைகள் பலரும் சமூக இணையதளங்களில் தங்கள் பெயரில் பக்கம் ஒன்றை நிறுவி, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக தோன்றினாலும், மறுபுறம் ஆபத்தான விஷயங்களும் இதில் இருக்கிறது. சிலர் ஏதாவது ஒரு பிரபலத்தின் பெயருடன் போலியான கணக்குகளை தொடங்கி, அதன்மூலம் அவர்கள் பெயரை களங்கப்படுத்தும் விதமாக ஏதாவது செய்து கொண்டிருப்பர். இதற்காகவே பல நட்சத்திரங்களும் சமூக இணையதளங்களுக்குள் வர பயப்படுவார்கள்.
தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பெயரில் பேஸ்புக்கில் பக்கம் ஒன்று திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இது சூர்யாவின் பக்கம்தான் என்று எண்ணி பல்வேறு ரசிகர்களும் அந்த பக்கத்தை லைக் செய்தனர்.
ஆனால், இந்த பக்கம் போலியானது என்று அங்கீகரிக்கப்பட்ட சூர்யா ரசிகர் மன்றம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூர்யா, இதுவரை சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இணையவில்லை என்றும், தற்போது பேஸ்புக்கில் சூர்யா பெயரில் பக்கம் வெளியானது போலியானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பக்கத்தை தொடங்கியவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011–ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
திருச்சியில் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது நடைப...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
0 comments:
Post a Comment