Thursday, January 22, 2015
பின்னலாடை வர்த்தகத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட பிரிவு ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை கூறியது:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2020-ஆம் ஆண்டுக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை செயல்படுத்த பல்வேறு முயற்சி
எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கமாக, கிராண்ட் தார்ண்டன் என்ற நிறுவனம் மூலமாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முதற்கட்டமாக, இணையதளத்தில் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிராண்ட் தார்ண்டன் நிறுவன மேலாளர்கள் மையாங்அகர்வால், துசார்சர்மா ஆகியோர் அடங்கிய குழு திருப்பூரில் முகாமிட்டு கடந்த சில நாள்களாக நூற்பாலைகள் முதல் நிட்டிங், டையிங், காம்பேக்டிங், உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள, ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
திட்ட அறிக்கை தயாரிக்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் பத்மானந்த், திருப்பூரிலுள்ள அனைத்து சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனையை பெற உள்ளார்.
இதனடிப்படையில், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்குக் சமர்ப்பிக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
0 comments:
Post a Comment