Thursday, January 22, 2015
பின்னலாடை வர்த்தகத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட பிரிவு ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை கூறியது:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2020-ஆம் ஆண்டுக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை செயல்படுத்த பல்வேறு முயற்சி
எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கமாக, கிராண்ட் தார்ண்டன் என்ற நிறுவனம் மூலமாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முதற்கட்டமாக, இணையதளத்தில் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிராண்ட் தார்ண்டன் நிறுவன மேலாளர்கள் மையாங்அகர்வால், துசார்சர்மா ஆகியோர் அடங்கிய குழு திருப்பூரில் முகாமிட்டு கடந்த சில நாள்களாக நூற்பாலைகள் முதல் நிட்டிங், டையிங், காம்பேக்டிங், உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள, ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
திட்ட அறிக்கை தயாரிக்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் பத்மானந்த், திருப்பூரிலுள்ள அனைத்து சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனையை பெற உள்ளார்.
இதனடிப்படையில், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்குக் சமர்ப்பிக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
0 comments:
Post a Comment