Thursday, January 22, 2015
பின்னலாடை வர்த்தகத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட பிரிவு ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை கூறியது:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2020-ஆம் ஆண்டுக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை செயல்படுத்த பல்வேறு முயற்சி
எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கமாக, கிராண்ட் தார்ண்டன் என்ற நிறுவனம் மூலமாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முதற்கட்டமாக, இணையதளத்தில் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிராண்ட் தார்ண்டன் நிறுவன மேலாளர்கள் மையாங்அகர்வால், துசார்சர்மா ஆகியோர் அடங்கிய குழு திருப்பூரில் முகாமிட்டு கடந்த சில நாள்களாக நூற்பாலைகள் முதல் நிட்டிங், டையிங், காம்பேக்டிங், உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள, ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
திட்ட அறிக்கை தயாரிக்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் பத்மானந்த், திருப்பூரிலுள்ள அனைத்து சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனையை பெற உள்ளார்.
இதனடிப்படையில், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்குக் சமர்ப்பிக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment