Thursday, January 22, 2015
பின்னலாடை வர்த்தகத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட பிரிவு ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை கூறியது:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2020-ஆம் ஆண்டுக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை செயல்படுத்த பல்வேறு முயற்சி
எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கமாக, கிராண்ட் தார்ண்டன் என்ற நிறுவனம் மூலமாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முதற்கட்டமாக, இணையதளத்தில் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிராண்ட் தார்ண்டன் நிறுவன மேலாளர்கள் மையாங்அகர்வால், துசார்சர்மா ஆகியோர் அடங்கிய குழு திருப்பூரில் முகாமிட்டு கடந்த சில நாள்களாக நூற்பாலைகள் முதல் நிட்டிங், டையிங், காம்பேக்டிங், உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள, ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
திட்ட அறிக்கை தயாரிக்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் பத்மானந்த், திருப்பூரிலுள்ள அனைத்து சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனையை பெற உள்ளார்.
இதனடிப்படையில், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்குக் சமர்ப்பிக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment