Tuesday, January 13, 2015
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆனையூர், குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஆனந்தம் நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை ஆணையாளர் கதிரவன் இன்று ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.
இந்த பணியில் உதவி ஆணையாளர்கள் தலைமையில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ‘அபேட்’ மருந்து தெளிப்பவர்கள், அம்மா திட்டப்பணியாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘அபேட்’ மருந்து தெளித்தல், கொசு புகை அடித்தல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது மாநகராட்சி மருத்துவ மனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி மற்றும் தகுதியில்லாதவர்களிடமோ, தன்னிச்சையாகவோ மருத்துவம் பார்க்க வேண்டாம். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்து வாங்க வேண்டாம். மருந்து கடைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து– மாத்திரைகள் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் குணாளன், சுகாதார ஆய்வாளர் கோபால், சந்திரமோகன், மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment