Thursday, January 01, 2015
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.
வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய மக்களே எனத் தெரியவந்துள்ளது.

பிராந்தியங்கள் என்று பார்க்கும் போது ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் பொதுவாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அடுத்த ஆண்டு குறித்து ஒரு நம்பிக்கை அவர்களிடையே உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை மேற்கு ஐரோப்பாவே பிராந்திய அடிப்படையில் கூடுதலாக மகிழ்ச்சியற்றவர்கள் இருக்கும் இடமாகவும் அறியப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு குறித்து சாதகமான கருத்து மேற்கு ஐரோப்பிய மக்களிடம் இல்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அதிலும் கிரேக்கத்திலேயே மகவும் கூடுதலாக மகிழ்ச்சியற்றவர்கள் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. இதில் 64,000க்கும் அதிகமானவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment