Thursday, January 01, 2015
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.
வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய மக்களே எனத் தெரியவந்துள்ளது.

பிராந்தியங்கள் என்று பார்க்கும் போது ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் பொதுவாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அடுத்த ஆண்டு குறித்து ஒரு நம்பிக்கை அவர்களிடையே உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை மேற்கு ஐரோப்பாவே பிராந்திய அடிப்படையில் கூடுதலாக மகிழ்ச்சியற்றவர்கள் இருக்கும் இடமாகவும் அறியப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு குறித்து சாதகமான கருத்து மேற்கு ஐரோப்பிய மக்களிடம் இல்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அதிலும் கிரேக்கத்திலேயே மகவும் கூடுதலாக மகிழ்ச்சியற்றவர்கள் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. இதில் 64,000க்கும் அதிகமானவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment