Friday, January 09, 2015
புதிய கம்பெனி சட்டத்தின்கீழ் மேற்கொள்ளும்
நடவடிக்கைகளுக்கு கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதரன்
வலியுறுத்தினார்.
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment