Thursday, January 01, 2015
உடுமலையில் விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகத்தை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
உடுமலை வட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 250 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 93 ஆயிரத்து 274 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி நகராட்சி வளாகத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் வேட்டி, சேலைகளை விநியோகிப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி, விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு, உடுமலை கோட்டாட்சியர் அ. சாதனைக்குறள், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன், நகராட்சித் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் வட்டம்: மடத்துக்குளம் வட்டத்தில் சுமார் 33 ஆயிரத்து 250 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 32 ஆயிரத்து 263 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி,சேலைகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் மடத்துக்குளத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. இதில், எம்எல்ஏ சி.சண்முகவேலு(மடத்துக்குளம்), மடத்துக்குளம் வட்டாட்சியர் சண்முகவடிவேலு, ஒன்றியக் குழுத் தலைவர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment