Thursday, January 01, 2015

மதுரை அருகே மேலூர், கீழவளவு, புது தாமரைப்பட்டி உள்பட பல இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சகாயம் நியமிக்கப்பட்டார்.
இவர் தனது குழுவுடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 3 கட்ட விசாரணையின் போது பி.ஆர்.பி. உள்பட பல கிரானைட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் புகார் மனு கொடுத்தனர். மேலும் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சகாயம் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
விதிமீறி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் விவசாயம், நீர்நிலைகள் அடைந்துள்ள பாதிப்பு விபரங்களை ஆதாரங்களுடன் சேகரித்து வருகிறார்.
முன்பு கண்மாய், ஓடை உள்பட நீர் நிலைகளில் செயல்பட்ட குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. விவசாய நிலங்களில் குவாரி நடத்த கலெக்டரின் அனுமதி அவசியம். ஆனால் கலெக்டரின் அனுமதி இல்லாமல் பல கண்மாய்களில் கற்களை கொட்டி தண்ணீரின் போக்கையே அடைத்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.
மேலும் இதை மீட்கவோ, கற்களை கொட்டியவர்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் இருந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது.
எனவே இதுபோல பல மோசடிகள் செய்து இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து நில பதிவுகள் குறித்த கிராம கணக்குகள், 1986–க்கு முந்தைய மற்றும் தற்போது உள்ள ‘அ’ பதிவேடு, சிட்டா, அடங்கல், குவாரி அனுமதி வழங்கப்பட்ட கோப்புகளை முழு விவரங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என கோட்டாட்சியர் செந்தில்குமாரிக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 1993–ல் குவாரி செயல்பட்ட காலம் முதல் 2012–ம் ஆண்டு வரை பணியாற்றிய வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட அதிகாரிகளின் பட்டியலையும் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளதால் கடந்த 20 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குவாரிகள் அனுமதித்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் பல விதிமீறல்கள் நடந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததால், உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment