Thursday, January 01, 2015
பொள்ளாச்சி–பழனி இடையேயான ரெயில் சோதனை ஓட்டம் உடுமலை வழியாக நேற்று நடைபெற்றது. இதனால் உடுமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment