Wednesday, December 31, 2014
திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி வசூல் இயக்கத்திற்காக பிப்ரவரி 1 முதல் 15ம் தேதி முடிய வீடு, வீடாக மக்களைச் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து சிறப்புப் பேரவைக் கூட்டம் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி பங்கேற்று இன்றைய அரசியல் சூழ்நிலையையும், மார்க்சிஸ்ட் கட்சியின் பணிகளையும் விளக்கிக் கூறினார். அத்துடன் மக்களைச் சந்தித்து நிதி வசூல் செய்வதன் முக்கியத்துவத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தில் வசூல் இயக்க அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளும் நேரடியாக வசூல் இயக்கத்தில் பங்கேற்கவும், அனைத்து ஊழியர்களைக் கொண்டு பகுதி வாரியாக வசூல் குழுக்கள் அமைக்கவும் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி முடிய நிதி வசூல் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ஜனவரி 7 இயக்கம்
இக்கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் பேசினார். அரசு நிர்வாகம் ஆதரவற்ற முதியோர், விதவைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டித்தும், இம்மக்களுக்கு உடனடியாக நிலுவைத் தொகையுடன் மாதாந்திர உதவித் தொகையை வழங்கவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜனவரி 7ம் தேதி மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்துவதென்று அண்மையில் ஊத்துக்குளியில் நடைபெற்று முடிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் நகரம், கிராமம் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் உள்ளிட்ட நலத்திட்ட பயனாளிகளைச் சந்தித்து விண்ணப்ப மனுக்கள் பூர்த்தி செய்து ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி ஜனவரி 7ம் தேதி மனுக் கொடுக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரம் கருமாரம்பாளையம் கட்சிக் கிளை சார்பில் அப்பகுதியில் 167 வீடுகளில் மக்களைச் சந்தித்து வசூலிக்கப்பட்ட ரூ.2580-ஐ அக்கிளை உறுப்பினர் மாணிக்கசுந்தரம் என்.பாண்டியிடம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment