Wednesday, December 31, 2014
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தமிழக அரசு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் போராடி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய மூன்று ஊர்களில் ஜனவரி 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் அருகில் அன்று மாலை 5 மணிக்கும், தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பும், உடுமலை பேருந்து நிலையம் முன்பும் அன்று மாலை 4 மணியளவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் கட்சி அணியினர் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment