Wednesday, December 31, 2014
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தமிழக அரசு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் போராடி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய மூன்று ஊர்களில் ஜனவரி 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் அருகில் அன்று மாலை 5 மணிக்கும், தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பும், உடுமலை பேருந்து நிலையம் முன்பும் அன்று மாலை 4 மணியளவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் கட்சி அணியினர் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment