Friday, January 02, 2015
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், ஊத்துக்குளி ரோட்டில் நாளை(சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் கோர்ட்டு வீதி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக ரெயில்வே சுரங்க பாலம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே இந்த பாலங்கள் கட்டுமான பணி முடிவடையும் வரை ஊத்துக்குளி ரோட்டில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், குமரன் சாலை வழியாக சென்று ஸ்ரீசக்தி தியேட்டரை அடைந்து யூனியன் மில் ரோடு வழியாக ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்ல வேண்டும். இதுபோல் ஊத்துக்குளி இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் 2–வது ரெயில்வே கேட்டில் இருந்து மின் மயானம் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment