Friday, January 02, 2015
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், ஊத்துக்குளி ரோட்டில் நாளை(சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் கோர்ட்டு வீதி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக ரெயில்வே சுரங்க பாலம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே இந்த பாலங்கள் கட்டுமான பணி முடிவடையும் வரை ஊத்துக்குளி ரோட்டில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், குமரன் சாலை வழியாக சென்று ஸ்ரீசக்தி தியேட்டரை அடைந்து யூனியன் மில் ரோடு வழியாக ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்ல வேண்டும். இதுபோல் ஊத்துக்குளி இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் 2–வது ரெயில்வே கேட்டில் இருந்து மின் மயானம் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment