Friday, January 02, 2015
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், ஊத்துக்குளி ரோட்டில் நாளை(சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் கோர்ட்டு வீதி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக ரெயில்வே சுரங்க பாலம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே இந்த பாலங்கள் கட்டுமான பணி முடிவடையும் வரை ஊத்துக்குளி ரோட்டில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், குமரன் சாலை வழியாக சென்று ஸ்ரீசக்தி தியேட்டரை அடைந்து யூனியன் மில் ரோடு வழியாக ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்ல வேண்டும். இதுபோல் ஊத்துக்குளி இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் 2–வது ரெயில்வே கேட்டில் இருந்து மின் மயானம் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011–ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
திருச்சியில் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது நடைப...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
0 comments:
Post a Comment