Monday, January 05, 2015
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.

எனவே விபத்துக் குள்ளான விமானத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 90க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இருந்தும் மீட்பு பணிகள் இன்னும் முடியவில்லை. பலியானவர்களின் உடல்கள், விமானத்தின் பாகங்கள் முழுவதும் மீட்கப்படவில்லை. 7 பேரினது உடல்கள் மீட்கப்பட்டது. தற்போது மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனவே, இதுவரை மீட்கப்பட்டுள்ள பிணங்களின் எண்ணிக்கை 9 அவர்களில் ஒரு பெண் பிணம் விமான பணிப்பெண் என அடையாளம் காணப் பட்டுள்ளது. மற்றொரு பெண் பயணி ஹயாதி லுத்பியா ஹமீது என தெரிய வந்துள்ளது.
பிணங்களுடன் பயணிகளின் உடமைகளும் மீட்கப் பட்டுள்ளன. 2 பேக்குகள், ஒரு சூட்கேஸ், விமானத்தின் ஏணி மற்றும் விமானத்தின் சிதைந்த பகுதியும் மீட்கப் பட்டுள்ளது. விமான விபத்து குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்து நிபுணர் ஜெப்ரீ தாமஸ் கூறுகையில், ’பயணிகளின் உடல்கள் விமானத்திற்குள் தான் இருக்க வேண்டும். விமானத்தின் உடைந்த உடற்பகுதி வழியாக வெளியே வந்த உடல்கள் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. அதனால் பல பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும்’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment