Friday, February 27, 2015
முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுப்போம், மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்!" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக மார்ச் 1ம் தேதி ஞாயிறன்று மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா நடைபெறுகிறது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறும் என்று வரவேற்புக்குழுத் தலைவர் அரிமா எம்.ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கருப்பராயன் கோயில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு நிர்வாகிகள், பணிக்குழுத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புக்குழு கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் மற்றும் லிங்க்ஸ் சௌகத் அலி, ஆர்.ஏ. ஏஜென்சிஸ் கே.ஜெயபால், வி.டி.சுப்பிரமணியம், கீதாஞ்சலி கோவிந்தப்பன், பிரிண்டிங் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டை தமிழக பண்பாட்டு தளத்தில் முற்போக்கு திசைவழியில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு குழுக்களின் பணிகள் பற்றி விவாதித்து, வரக்கூடிய நாட்களில் பணிகளை முனைப்புடன் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டது.
இதில் கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் உரையாற்றினர்.
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக மார்ச் 1ம் தேதி முதல் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில், கே.ஆர்.சி சிட்டி சென்டரில் வரவேற்புக்குழு அலுவலகம் முழு நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் தமுஎகச அமைப்பினர் மட்டுமின்றி கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்தில் செயல்படும் அனைத்து படைப்பாளிகளும் பங்கேற்கும்படி வரவேற்புக்குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment