Thursday, February 26, 2015

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பால்குட ஊர்வலம், சர்வ சமய பிரார்த்தனை, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாலை கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 19 ஆண், 12 பெண் குழந்தைகள் என மொத்தம் 31 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு நாளை (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடக்கும் இந்த விழாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்குகிறார். பகுதி செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகிக்கிறார்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கிறார். விழாவில் மேயர் ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜன், துணை மேயர் திரவியம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா மற்றும் பகுதி, தொகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் முதல்வர் அம்மா பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் தங்கமோதிரம் வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ.க்கள், பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
இந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment