Tuesday, February 17, 2015

மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததாக பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கீழையூர், கீழவளவு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த கிரானைட் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுத்து பதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கிரானைட் நிறுவனங்களை சேர்ந்த நாகூர் அனீபா, பி.எல்.படிக்காசு, சோலைராஜன், மோகன், சேதுராமன் ஆகிய 5 பேரையும் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரை 1–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி கே.எச்.இளவழகன் விசாரித்து, படிக்காசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
நிபந்தனையில், பி.எல்.படிக்காசு 2 கோடி ரூபாய் ரொக்கமாக கோர்ட்டில் வைப்பீடாக வைக்க வேண்டும் என்றும், ரூ.2 கோடியே 38 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மோகன், நாகூர் அனீபா ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். சோலைராஜனுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
0 comments:
Post a Comment