Tuesday, February 17, 2015
உடுமலை அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4,655 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் அழித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீதம்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி கேரளாவுக்கு எரிசாயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் (வயது 33) என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தபோது அங்கு சிமெண்ட் கூரை போடப்பட்ட குடோனில் 133 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் 4,655 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 4,655 லிட்டர் எரிசாராயத்தை கலால்துறை தனிதாசில்தார் கனகராஜ், குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று குடிமங்கலம் அருகே உள்ள குமணன் குட்டையில் கொட்டி தீயிட்டு அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...

0 comments:
Post a Comment