Tuesday, February 17, 2015
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் ஐந்தாயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் திருப்பூர் மையமும், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முன்னாள் சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் தலைமையிலான குழுவினரும், பின்னல் புக் டிரஸ்ட் உடன் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்தனர்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை, மாலை என இருவேளை ஆறு மணி நேரம் நிலவேம்பு கசாயம் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் இருக்கும் சூழலில் புத்தகக் கண்காட்சிக்கு வருவோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐந்தாயிரம் பேர் பயனடைந்தனர். இந்த ஏற்பாட்டைச் செய்த சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் மற்றும் இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் 12வது திருப்பூர் புத்தக திருவிழா வரவேற்புக்குழுவினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
0 comments:
Post a Comment