Thursday, February 05, 2015
திருப்பூரில் 750 புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் தலைமையிலான போலீசார் வெள்ளியங்காடு பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, தாராபுரம் ரோட்டில் வெள்ளியங்காடு 60 அடி ரோடு சந்திப்பில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சிறிய மஞ்சள் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் திருப்பூர் அரண்மனைப்புதூர் பகுதியை சேர்ந்த சிவகார்த்திகேயனின் மகன் மணிகண்டன்(வயது 19) என்பதும், திருட்டு சி.டி.க்களை விற்றுவருவதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்த பையில் 150 புதுப்படங்களின் சி.டி.க்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளியங்காடு பகுதியில் சரவணக்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்து ஐ, லிங்கா, ஆம்பள, கயல், வெள்ளக்காரதுரை உள்பட 600 புதுப்பட சி.டி.க்கள், 10 ஆபாசபட சி.டி.க்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதைதொடர்ந்து மணிகண்டனையும், அவரிடம் கைப்பற்றிய 760 சி.டி.க்களையும் போலீசார் திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும், 10 ஆபாச பட சி.டி.க்கள் உள்பட 760 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருப்பூர் 2–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான சரவணக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment