Thursday, February 05, 2015
திருப்பூரில் 750 புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் தலைமையிலான போலீசார் வெள்ளியங்காடு பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, தாராபுரம் ரோட்டில் வெள்ளியங்காடு 60 அடி ரோடு சந்திப்பில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சிறிய மஞ்சள் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் திருப்பூர் அரண்மனைப்புதூர் பகுதியை சேர்ந்த சிவகார்த்திகேயனின் மகன் மணிகண்டன்(வயது 19) என்பதும், திருட்டு சி.டி.க்களை விற்றுவருவதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்த பையில் 150 புதுப்படங்களின் சி.டி.க்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளியங்காடு பகுதியில் சரவணக்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்து ஐ, லிங்கா, ஆம்பள, கயல், வெள்ளக்காரதுரை உள்பட 600 புதுப்பட சி.டி.க்கள், 10 ஆபாசபட சி.டி.க்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதைதொடர்ந்து மணிகண்டனையும், அவரிடம் கைப்பற்றிய 760 சி.டி.க்களையும் போலீசார் திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும், 10 ஆபாச பட சி.டி.க்கள் உள்பட 760 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருப்பூர் 2–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான சரவணக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment