Thursday, February 05, 2015
திருப்பூரில் 750 புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் தலைமையிலான போலீசார் வெள்ளியங்காடு பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, தாராபுரம் ரோட்டில் வெள்ளியங்காடு 60 அடி ரோடு சந்திப்பில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சிறிய மஞ்சள் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் திருப்பூர் அரண்மனைப்புதூர் பகுதியை சேர்ந்த சிவகார்த்திகேயனின் மகன் மணிகண்டன்(வயது 19) என்பதும், திருட்டு சி.டி.க்களை விற்றுவருவதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்த பையில் 150 புதுப்படங்களின் சி.டி.க்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளியங்காடு பகுதியில் சரவணக்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்து ஐ, லிங்கா, ஆம்பள, கயல், வெள்ளக்காரதுரை உள்பட 600 புதுப்பட சி.டி.க்கள், 10 ஆபாசபட சி.டி.க்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதைதொடர்ந்து மணிகண்டனையும், அவரிடம் கைப்பற்றிய 760 சி.டி.க்களையும் போலீசார் திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும், 10 ஆபாச பட சி.டி.க்கள் உள்பட 760 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருப்பூர் 2–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான சரவணக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment