Tuesday, February 17, 2015
தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த
2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் 31–ந் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக்கொலை தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் வேளாண் விற்பனைக்குழு
தலைவர் அட்டாக்பாண்டியின் உறவினர் உள்பட 15 பேர் கோர்ட்டில் சரண்
அடைந்தனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டியை போலீசார் தேடி வந்தனர். அவரை
கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவரை, தேடப்படும் குற்றவாளியாக போலீசார்
அறிவித்தனர்.
இந்த நிலையில் அட்டாக்பாண்டி முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
பொட்டு சுரேஷ் கொலைக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அந்த கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று, நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், அட்டாக்பாண்டிக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் அவர் வாதாடுகையில், அட்டாக்பாண்டி மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் விரோதம் காரணமாக, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், அட்டாக்பாண்டி சம்மந்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறினார்.
அட்டாக்பாண்டி தரப்பில் ஆஜரான வக்கீல் மலையேந்திரன் கூறுகையில், இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராகி வாதாட இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து நீதிபதி பிரகாஷ், வழக்கு விசாரணையை வருகிற 23–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
0 comments:
Post a Comment