Tuesday, February 17, 2015

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் ஊராக உட்கட்ட அமைப்பு திட்டத்தின்மூலம் வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி கிராமத்தில் இருந்து கல்கொண்டான்பட்டி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையும், வீரபாண்டி கிராமத்தில் இருந்து விண்ணக்குடி கிராமத்திற்கு ரூ.25 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் கொசவபட்டி கிராமத்தில் இருந்து வடுகப்பட்டி கிராமம் வரை தார்சாலை ரூ.43 லட்சத்து 65 ஆயிரம் 2014–2015 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை நடைபெறுவதற்கு பூமி பூஜை கொசவபட்டி வடுகப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமை வகித்து வேலையை தொடங்கி வைத்தார். செல்லம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவளக்கொடி ராசுக்காளை, கொடிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.இ.பார்வர்ட் பிளாக் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவி, உசிலம்பட்டி நகர செயலாளர் பாஸ்கரபாண்டி, சவுந்திரபாண்டி மற்றும் அ.தி.மு.க. மாணவர் அணி மகேந்திரபாண்டி, சக்கரப்பநாயக்கனூர் ஜெயபாண்டி, தேவன், ஆசைமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ராமன், முருகன், டாஸ்மாக் வடிவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
0 comments:
Post a Comment