Tuesday, February 17, 2015

மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
0 comments:
Post a Comment