Tuesday, February 17, 2015

மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
0 comments:
Post a Comment